கீழக்கரை: கீழக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கீழக்கரை கடற்கரையை ஓரங்களில் உடைந்த படகு மரத்துண்டுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து மோசமான நிலையில் இப்பகுதி உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கீழக்கரை கடல் பகுதியிலும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக மிதக்கின்றன. இவ்வாறு, தொடர்ந்து கடலில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பையும் அதிகரித்து வருவதால், மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.