டெல்லி : மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மின் கட்டமைப்பை நிர்வகிக்கும் ஒன்றிய அரசின் பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 13 மாநிலங்கள் 5,100 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளன. மின்சார சட்டத்திருத்தத்தின் புதிய விதிகளின்படி மாநிலங்கள் உரிய காலத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், காலக்கெடு முடிந்துவிட்டதால், வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலைக்கு மாநிலங்கள் உள்ளாகியுள்ளது.