கொழும்பு: நடிகர் மம்மூட்டியை இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா சந்தித்து பேசினார்.‘கடுகன்னவா ஒரு யாத்ரகுறிப்’என்ற மலையாள படத்தில் மம்மூட்டி நடிக்கிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்புக்கு கொழும்புவுக்கு சென்றிருந்தார் மம்மூட்டி. இந்தியாவிலிருந்து மம்மூட்டி வந்திருப்பதை அறிந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா, மம்மூட்டி தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார்.