தஞ்சை: கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை முடித்ததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே கொற்கை, பம்பைப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் சாலையை அகலப்படுத்தும் பணி சமீபத்தில் நடைபெற்றது. தென்னூரில் பழைய சாலையின் ஓரத்தில் இருந்த 8 மின் கம்பங்களை அகற்றாமல் அப்படியே சாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள இந்த சாலையில், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.