பெங்களூரு: இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்ச் நிலம் கூட கிடையாது என்று கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தின் சிவமோஹா நகரில் இருக்கும் அமீர் அகமது பகுதியில் சுதந்திர தினத்தன்று இந்து அமைப்புகள் சவார்க்கர் பேனர்களை வைத்தனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர், திப்பு சுல்தான் பேனர்களை வைக்க முயன்றனர். இதனால் வெடித்த மோதல் கலவரமாக மாறி இந்து அமைப்பைச் சேர்ந்த பிரேம் சிங் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரேம் சிங்கை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.