ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படை, ஜி.பி.எஸ். கருவிகளை பறித்து சென்றது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டி அடித்தனர்.