திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் அரசு சொகுசு பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 50-க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியிருக்கின்றனர். திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே அரசு சொகுசு பேருந்து விபத்துகுள்ளானது.
இந்த அரசு பேருந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லைப் பகுதியான லட்சுமிபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அருகே இருந்த பள்ளத்தில் அரசு சொகுசு பேருந்து திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துகுள்ளானது.