செய்யூர்: அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யகோரி மதுராந்தகம் - கூவத்தூர் சாலையில் அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதயில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், பவுஞ்சூர் அடுத்த கே.நெல்வாய் ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த ஏழுமலை மனைவி அஞ்சாலை என்பவர் பதவி வகித்து வருகிறார். ஊராட்சி மன்ற தலைவரின் மகனான பிரித்திவிராஜ் ஊராட்சி பணிகள் மற்றும் செயல்பாடுகளை வழி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்வூராட்சியில் 2005ம் ஆண்டு வரவு செலவு கணக்கில் முறைகேடு இருப்பதாக கூறி முறைகேடு குறித்து, கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் நடந்த முறைகோடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு மனு அளித்துள்ளார். இவர் அளித்த மனு குறித்து தகவல் அறிந்த பிரித்திவிராஜ் அவரது தம்பி ஆனந்தராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் நந்தகோபால் வீட்டிற்கு சென்று தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.