சென்னை: செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகியவை தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள். செஸ் ஒலிம்பியாட் போன்று சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசை ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார்.