தூத்துக்குடி: தூத்துக்குடியில் சலூன் கடைக்காரர் ஒருவர் தமது முடிதிருத்தும் கடையில் 200 புத்தகங்களுடன் துவங்கிய நூலகம் 3 வருடங்களில் 3 ஆயிரம் புத்தககங்களாக அதிகரித்து, வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. தூத்துக்குடியை சேர்ந்த புத்தக பிரியரான பொன்மாரியப்பன் புத்தககங்கள் வாசிக்கும் பழக்கத்தை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு தான், தான் நடத்தும் முடிதிருத்தும் கடையிலேயே சிறிய நூலகம் ஒன்றை தொடங்கினார். தாங்கள் வாசிக்கும் புத்தகத்தில் உள்ள நல்ல கருத்துகளை பதிவேட்டில் பதிய வைப்பதற்கும் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துகிறார்.