பெசன்ட்நகர் அருகே ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்

வேளச்சேரி: சென்னை ஆழ்வார் திருநகர், சரஸ்வதி நகர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன். இவரது மகன் சுந்தர் (19), சென்னையில் உள்ள  தனியார் கலைக் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் தனது நண்பர்களுடன் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு சென்றார். பின்னர், அனைவரும் கடலில் ஜாலியாக குளித்துள்ளனர்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை சுந்தரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதைப்பார்த்த நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள் படகில் சென்று அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராட்சத அலையில் இழுத்துச்செல்லப்பட்ட  மாணவனை தேடி வருகின்றனர்.

Related Stories: