பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே கேசவராஜ்குப்பத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, பொதட்டூர்பேட்டை இந்தியன் வங்கி கிளை இணைந்து கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், திருத்தணி கோட்ட கால்நடை உதவி இயக்குநர் டாக்டர். தாமோதரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன் பங்கேற்று முகாம் தொடங்கிவைத்தார்.