நத்தம் அருகே பட்டப்பகலில் மெக்கானிக்கை வெட்டி கொன்ற வாலிபர் கல்லால் தாக்கி கொலை: கிராம மக்களே தீர்த்து கட்டினர்

நத்தம்: நத்தம் அருகே பட்டப்பகலில் டிவி மெக்கானிக்கை வெட்டி கொலை செய்தவரை, கிராம மக்கள் கல்லால் தாக்கி கொன்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் தங்கராஜா (41). டிவி மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (24). குடிப்பழக்கம் உள்ளவர்கள். நேற்று ஊரில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உதயகுமார், அரிவாளால் தங்கராஜாவை சாரமாரியாக வெட்டினார்.

இதில்   தங்கராஜா உயிரிழந்தார். இதை பார்த்த கிராம மக்கள், உதயகுமாரை கல்லால் சராமரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்தவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் டிவி மெக்கானிக்கை வெட்டி கொலை செய்தவரை, கிராம மக்கள் கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயகுமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: