காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். தகவலின்படி, மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த போது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதுகுறித்து காபூலின் காவல்துறைத் தலைவரின் தலிபான் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், ‘மேற்கு காபூலில் சர்-இ-கரேஸ் பகுதியில் வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.