கடலூர்: கடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரிக்குப்பம்- எம். புதூர் இடையே உள்ள சாலை கரடு முரடாக உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் ஒன்றிய பகுதியில் அமைந்துள்ளது பாதிரிக்குப்பம், எம் புதூர். இதில் பாதிரிக்குப்பம் -கடலூர் மாநகராட்சியின் புறநகர் பகுதியாகவும் உள்ளது. மேலும் இப்பகுதியில் இருந்து எம் புதூர் செல்லக்கூடிய சாலை கடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பயண வழித்தடமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் கரடு முரடான இச்சாலை சுமார் 5 கி.மீ தூரம் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.