புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் பயிற்சி காவலர்கள் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்று முதல் ஒரு வாரத்துக்கு காவலர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது. புதுவையில் கொரோ னா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். இதில் ஒரு பயிற்சி காவலருக்கு கடந்த ஜூன் 16ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு, தினமும் ஒற்றை இலக்கத்தில் பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.