பொன்னை: பொன்னை அருகே குமரகுண்டா பகுதியில் சாலையோரம் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த குமரகுண்டா பகுதியில் சித்தூர்- சோளிங்கர் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையோரம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிலர் குளுக்கோஸ் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். மேலும் கடந்த இரு தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் பிளாஸ்டிக் கழிவுகள் நனைந்து துர்நாற்றம் வீசி வருகின்றன.