பிர்மிங்காம்: காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெண்கலம் வென்றார். லவ்பிரீத் சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி மூன்றாமிடம் பிடித்தார். 22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 77 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகள் வரும் 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.