நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் ரூபாயை இழந்த பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ், பி.காம் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டில் உள்ள சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான சுரேஷ், தொடர்ந்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.