ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீஆதிவராகநல்லூர்-ஸ்ரீமுஷ்ணம் செல்லும் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீஆதிவராகநல்லூர் செல்லும் சாலையில் ஏற்கனவே பாலம் இருந்ததை அகற்றி புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. இந்த பாலத்தில் பக்கவாட்டு பகுதியில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பாதை முறையாக இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் இந்த சாலையை கடக்கும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.