தர்மபுரி: தர்மபுரி ஆவின் நகர் பகுதியை சேர்ந்தவர் மேகராஜ், பாலக்கோடு பகுதியில் டூவீலர் ஷோரூம் வைத்துள்ளார். இவரது மகன் சச்சின் (16), தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமை, உறவினரான பாலாஜி வீட்டுக்கு சச்சின் வந்துள்ளான். பின்னர் பாலாஜியுடன் சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது ஒரு கும்பல் இருவரையும் கடத்தியது. சச்சின் தந்தை மேகராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் ரூ.1 கோடி கேட்டுள்ளனர்.