சிரஞ்சீவி, சல்மானை சந்தித்த விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: லைகர் படம் வெளியாவதால் சிரஞ்சீவி, சல்மான் கானை சந்தித்து விஜய் தேவரகொண்டா ஆசி பெற்றார். விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ராம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் மைக் டைசன் நடித்துள்ள படம் லைகர். இந்த படத்தை புரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். நடிகை சார்மி, கரண் ஜோஹர் இணைந்து தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 25ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. ஓரிரு தினங்களுக்கு முன் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த படத்தில் கவுரவ வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். சிரஞ்சீவியுடன் சல்மான் கான் பங்கேற்கும் பாடல் காட்சியை இயக்குனர் ராஜா படமாக்கி வந்தார். அப்போது லைகர் பட ஹீரோ விஜய் தேவரகொண்டா, இயக்குனர் புரி ஜெகன்னாத், தயாரிப்பாளர் சார்மி ஆகியோர் காட்ஃபாதர் ஷூட்டிங் நடக்கும் செட்டுக்கு வந்தனர். சிரஞ்சீவி, சல்மான் கானை சந்தித்த லைகர் பட டீம், அவர்களிடம் ஆசி பெற்றனர். இது பற்றி விஜய் தேவரகொண்டா கூறும்போது, ‘தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் ஒரே படத்தில் நடிப்பது என்னை போன்ற அவர்களது ரசிகர்களுக்கு பெரிய டிரீட். அவர்கள் சேர்ந்து நடிக்கும்போது அதை பார்த்துவிட்டு, அப்படியே அவர்களிடம் ஆசிர்வாதமும் பெற்றது எனக்கு உற்சாகத்தை கொடுத்தது’ என்றார்.

Related Stories: