ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, கிருஷ்ணாபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சிக்கிய சருகுமான், 3 பாம்புகளை பிடித்து, வனப்பகுதியில் விடுவித்தனர்.ராஜபாளையம் அருகே, கிருஷ்ணாபுரம் கூட்டுறவு தொடங்க வேளாண்மை வங்கி பின்புறம் முட்புதரில் அபூர்வ விலங்கு ஒன்று திரிவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில், விலங்கு நல ஆர்வலர் மாரீஸ்கண்ணன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சென்று பார்த்த போது அரிய வகை சருகுமான் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் சருகுமானைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.