ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோயாளிகள் உட்பட 8 பேர் உடல் கருகி பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேசம், ஜபல்பூரில் 3 மாடிகளை கொண்ட தனியார் மருத்துவமனையில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் பற்றிய தீ அனைத்து பகுதிக்கும் பரவியது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் அங்கு வந்து மருத்துவமனையில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும் 8 பேர் தீயில் கருகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.