சீர்காழி: தமிழகத்தில் இந்தாண்டு 1 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொண்டாட ஏற்பாடு நடந்து வருகின்றன. “வீதி தோறும் விநாயகர் வீடு தோறும் விநாயகர்” என்ற இலக்குடன் தமிழகத்தில் இந்தாண்டு 1 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது.