சென்னை : கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளிலும் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக பள்ளிகல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் நலன் கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களது பெயரில் வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.