சின்னாளபட்டி: ஆத்தூர் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி அமோகமாக உள்ளது. இங்கு பறிக்கும் வெண்டைக் காய்களை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். செம்பட்டி அருகே, ஆத்தூர் ஊராட்சியில் குறுகிய கால பயிரான வெண்டைக்காயை நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். வெண்டைக்காய் செடிகள் நன்கு வளர்ந்து காய்த்து குலுங்குகின்றன. பெண் தொழிலாளர்கள் வெண்டைக்காய்களை பறித்து 50 முதல் 55 கிலோ வரை பேக்கிங் செய்கின்றனர்.