புதுடெல்லி: ‘குஜராத்தில் கள்ளச் சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்யும் மாபியாக்களுக்கு பாதுகாப்பு தருவது யார்?’ என்று ராகுல் கேட்டுள்ளார். குஜராத்தின் பொடாட், அகமதாபாத் மாவட்டங்களில் கடந்த 25ம் தேதி ரசாயனம் கலந்த கள்ளச் சாராயம் குடித்த 42 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வறட்சி மிகுந்த குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளன.