விருது பெற்ற திருநங்கை நமீதா அமைச்சரிடம் வாழ்த்து

சென்னை: சமூக நலத்துறை வெளியிட்ட அறிக்கை: திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி 2022 போட்டி தாய்லாந்தில் நடந்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து கலந்துகொண்டு முதல் 10 இடத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் இறுதி போட்டியில் மிஸ் பாப்புலர் வோட் ஆப் வேர்ல்டு விருது பெற்றார். அவர், தங்க கோப்பை விருதும், SASHES எனப்படும் அங்கி அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

திருநங்கை நமீதா மாரிமுத்து மிஸ் பாப்புலர் வோட் ஆப் வேர்ல்டு- 2022 விருதிற்காக ெபற்ற தங்க கோப்பையை நேற்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தலைமை செயலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியின்போது சமூக நலத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா, சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு இணைச் செயலாளர் சீத்தாலட்சுமி உடனிருந்தனர்.

Related Stories: