திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரகொளத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பாபு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியரை பணியிடை மாற்றம் செய்யக்கூடாது என கோரிக்கை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.