கோவை: கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான புளூ பேண்ட் எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2-ம் சுற்று கோவையில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்திய முழுவதும் இருந்து மொத்தம் 8 அணிகள் சார்பில் 54 கார்கள் பங்கேற்கிறது. ராலி சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் என இரு பிரிவுகளில் போட்டி நடக்கிறது. நாளை வாகனங்களின் பரிசோதனை மற்றும் கொடியசைத்து வைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது.
போட்டியை, கோவை ஜென்னிஸ் ரெசிடென்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின்னர், போட்டிகள் 30, 31 ஆகிய தேதிகளில் வெள்ளலூர் ஜி-ஸ்கொயர் சிட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலை மற்றும் கோவையை அடுத்த கேத்தனூர் பகுதியில் உள்ள காற்றாலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையில் நடக்கிறது. போட்டிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அளவிலான பரிசு தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது.