புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகர் நியமனம் அதிமுகவில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவில் அமைப்பு செயலாளராக, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளராக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், வக்கீல் அணி தலைவராக திருமாறன், வக்கீல் பிரிவு செயலாளராக ஆர்.வி.பாபு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு என்று இருந்த மாவட்டங்கள் 4ஆக பிரிக்கப்பட்டு புதிதாக மதுரை புறநகர் தெற்கு என்ற மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், மேலூர் நகரச் செயலாளராக இருந்த எஸ்.ஏ.பாஸ்கரன், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக (மதுரை கிழக்கு, மேலூர் தொகுதிகள்) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மதுரை தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த முருகேசன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ள மூர்த்தி, அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் பாளை தர்மலிங்கம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளராகவும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் என்ற மூர்த்தி பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக சண்முகம், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரத்தினவேல், திருச்சி தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளராக சாமிக்கண்ணு, விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தெய்வம், விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளராகவும், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ பாலகங்காதரன், விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் கதிரவன், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும், புதுச்சேரி மாநில மேற்கு செயலாளராக பொறுப்பு வகிக்கும் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்திசேகர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: