திண்டுக்கல்: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்’’ என பேசினார். இதனை கேட்டு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேடையில் இருந்தவர்கள் அவருக்கு அருகே சென்று திருத்தி கூறினர்.