ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் மழைநீர் கருப்பு கலராக மாறியதால் மக்களுக்கு நோய் தாக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நேற்று காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் மக்களை வாட்டிவதைத்து வந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. திருவள்ளூர் சாலையில் உள்ள பழைய பெட்ரோல் பங்க் எதிரில் மழைநீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக கால்வாய் தூர் வாரும் பணி நடந்து வருகிறது.