கோவை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வினை ஆண்களை விட அதிகளவில் பெண்கள் எழுதியுள்ளனர். பாலூட்டும் தாய்மார்கள் சிலர் தங்களின் கை குழந்தைகளுடன் தேர்வெழுத வந்திருந்தனர். இந்நிலையில், கோவை நீலம்பூரில் உள்ள கே.பி.ஆர் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு கை குழந்தையுடன் வந்த தாய்மார்கள் தேர்வெழுத சென்றனர்.