தஞ்சாவூர்: தஞ்சை அருகே 65 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோவில் திருவிழாவில் 1000 கிடாக்களை வெட்டி வீட்டுக்கு வீடு பந்தல் அமைத்து அசைவ விருந்து படைத்ததால் கிராமமே கமகமத்தது. தஞ்சை அருகே தெத்துவாசல்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கிடாக்கள் வெட்டி திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். 65 ஆண்டுகளுக்கு முன்பு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கிடாவெட்டு திருவிழா தொடர்ந்து தடைப்பட்டது. இந்தாண்டு, விவசாயம் சிறப்பாக அமைந்திருப்பதால் ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி பேசி அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.