நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீனாவில் தயாரான ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டவரை கடலோர காவல் குழும காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேதாரண்யத்தை அடுத்து இருக்கும் உணாங்காடு பகுதியில் ரப்பர் படகு கரை ஒதுங்கிய தகவல் அறிந்து சென்ற கடலோர காவல் குழும போலீசார் படகை கைப்பற்றி அதில் வந்தவர் யார் என்று விசாரணை செய்தனர். 13 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்ட அந்த படகு சீனாவில் தயாரானது. அதில் இலங்கை வாட்டர் பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் இருந்தன. இதனை தொடர்ந்து வாகன சோதனையை தீவிரப்படுத்திய போலீசார் தோப்புத்துறையில் சந்தேகத்திற்கு உள்ளகா நடந்து சென்ற வெளிநாட்டவரை பிடித்து விசாரித்ததில் போலந்தை சேர்ந்த வாத்திஸ் ஸ்வாப் என்பதும் அவரே படகில் வந்தவர் என்றும் உறுதியானது.