சென்னை: நன்னடத்தை பிணையை மீறிய ரவுடிக்கு 294 நாட்கள் சிறை தண்டனை விதித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்தவர் கீதன் (25). ரவுடியான இவர் மீது, 2 கொலை முயற்சி உள்பட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், மெரினா காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். கடந்த 6.5.2022 அன்று கீதன், மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் முன்பு ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாக கூறி ஒரு வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழி பிணைப்பத்திரம் எழுதி கொடுத்தார்.