கபடியில் காலிறுதிக்கு முன்னேறியது தமிழகம்

புதுடெல்லி: தேசிய சீனியர் கபடி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு தமிழகம் முன்னேறியுள்ளது. 69வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலத்தில் உள்ள சார்கி டாத்ரி நகரில் நடந்து வருகிறது. 31 அணிகள் பங்கேற்கும் இந்தத்தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழக அணி இமாச்சல் பிரதேச அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தமிழகம் 33 - 27 என்ற புள்ளிக்கணக்கில் இமாச்சலப் பிரதேசத்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

Related Stories: