திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வழக்கு விசாரணைக்காக வந்தபோது தடுப்பு சுவரில் போலீஸ் வாகனம் மோதி எஸ்ஐ உட்பட 3 பேர் பலியாகினர். மற்ெறாரு எஸ்ஐ உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்த போலீஸ் எஸ்ஐக்கள் அவினாஷ், தீட்சித் மற்றும் போலீஸ்காரர்கள் அணில், சரவணா, பஸ்வா ஆகியோர் வழக்கு விசாரணைக்காக இன்று காலை காரில் திருப்பதி நோக்கி வந்தனர். சித்தூர் அடுத்த பூதலப்பட்டு - நாயுடுபேட்டை சாலையில் உள்ள சவுடேபல்லி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எஸ்.ஐ.அவினாஷ், காவலர் அணில், கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.