திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பில், எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் திருக்கழுக்குன்றம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த 50 மாணவிகள் கலந்துக் கொண்ட ஓவியப் போட்டி நடந்தது. இதில், 10 மாணவிகள் வெற்றி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.