கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரமணா கொள்ளு என்ற 32 வயது இளைஞர், மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு ஈஷா மையத்தில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பேரூர் டிஎஸ்பி தலைமையில் ஆலந்துறை காவல்நிலைய போலீசார் ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.