பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று படித்துறையை ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் காவேரி ரயில் பாலத்தின் அடியில், படித்துறையில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. ஆற்றில் நீர் வற்றியதும், இந்த ஆகாயத்தாமரை செடிகள் படித்துறை பகுதியை ஆக்கிரமித்து விடுவதால், படித்துறையை மக்கள் உபயோகிக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.