கும்பகோணத்தில் பல நூறு கோடி மதிப்புள்ள 6 சிலைகள் பறிமுதல்

கும்பகோணத்தில்: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சிலைகள் கும்பகோணத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர், ராமலிங்கத்தை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஸ்ரீ தர்ஷன் ஆர்ட் மெட்டல் கடையில் ஆவணமின்றி இருந்த தொன்மையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இச்சிலைகள் வைத்திருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: