கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரத்தில் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு, மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாணவ, மாணவியரின் சைக்கிள் பேரணி நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கியது. சைக்கிள் பேரணியை நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.