இட்டாநகர்: இந்திய - சீன எல்லையில் சாலை பணியில் ஈடுபட்ட 19 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அருணாச்சல பிரதேச மாநிலம் குருங் குமே மாவட்டத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கு அருகே தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சிலர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரின் உடல் குமி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அப்போதிருந்து, குமே ஆற்றில் மூழ்கி அனைத்து தொழிலாளர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அசாமிற்கு செல்ல விடுப்பு அளிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.