கலவர பூமியாக மாறிய கனியாமூர் வன்முறை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி உத்தரவு..!!

சென்னை: கனியாமூர் வன்முறை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மான முறையில் உயிரிழந்தார். அப்பகுதியில் மாணவியின் உறவினர்கள் கடந்த 5 நாள்களாக அமைதியான முறையில் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனியையே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு போராட்டக்காரர்கள் பள்ளி மீது கற்களை வீசி சூறையாடினர்.

தடுக்க முயன்றபோது, காவலர்கள் மீதும் கற்களை வீசி தாக்கியதில் டிஐஜி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீயிட்டு எரித்ததோடு மட்டுமின்றி, சாலையோரம் இருந்த காவல்துறை வாகனத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிவிரைவுப்படையினர் போராட்டக்காரர்களை வெளியேற்றியதை அடுத்து தனியார் பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வன்முறை குறித்து விசாரிக்க பிரவீன்குமார் அபநபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் ஆவடி பட்டாலியன் தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்.பி. கிங்ஸ்லி உள்ளிட்ட 5 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். வன்முறைக்கு பின்னணியில் உள்ள சதியை இந்த சிறப்பு புலனாய்வு குழு கண்டறியும். மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்களை கண்டறிந்தும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: