புதுடெல்லி: நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதால், அதானி நிறுவனம் 10 மடங்கு லாபம் சம்பாதிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்ததால், வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு நிலைமை சரி செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: ஒன்றிய அரசு முதலில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்துவதை கட்டாயமாக்கியது. அதன் பின்னர் இந்த நிலக்கரியை இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியது. இதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர்.