குத்தாலம்: உலக நன்மை வேண்டி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரம் தேங்காய்களை உடைத்து வழிபாடு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோமுக்தீஸ்வரர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர் தனது தந்தையின் சிவ வேள்விக்காக பதிகம் பாடி ஆயிரம் பொன் பெற்ற தலமாகவும், சுவாமி முசுகுந்த சக்கரவர்த்திக்கு குழந்தை பேறு அளித்த தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.