வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்: கனியாமூர் பள்ளி ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

கள்ளக்குறிச்சி: வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மாணவர்கள் என்ற பெயரில் பள்ளி முன் கூடிய சிலர் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டனர். மாணவி மரணமடைந்த மறுநாளே அமைச்சர் சி.வி.கணேசன் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார் என அமைச்சர்  எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: